ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டுமென மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ஜூலை-1 முதல், இமாச்சலப் பிரதேசம் நடைமுறைப்படுத்த இருக்கிறது எனக் கூடுதல் தலைமை செயலாளர் பிரபோத் சக்சேனா கூறினார்.
உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு இமாச்சலப் பிரதேசத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இமாச்சலப் பிரதேச அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் இணைந்து நடத்திய சுற்று சூழலில் சிறந்து விளங்குபர்களுக்கான விருது விழாவில் கூடுதல் தலைமை செயலாளர் பிரபோத் சக்சேனா பேசியதாவது:
ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை மாநில அரசும் முற்றிலுமாக தடை செய்கிறது. இந்தியாவிலே இமாச்சலப் பிரதேசம்தான் முதல் மாநிலமாக இந்த பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துகிறது. இதில் மக்களின் ஒத்துழைப்பு வேண்டும்.