மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!
பாமக தலைவர் அன்புமணி வேட்புமனுத் தாக்கல் செய்தது பற்றி..


மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும் 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும்.
அதனடிப்படையில், அதிமுகவுக்கான ஒரு இடத்தை பாமகவுக்கு அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்துக்கு இன்று காலை வருகைதந்த அன்புமணியை பாமக மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து மாநிலங்களவைத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அன்புமணி ராமதாஸ் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதன்மூலம் மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகவுள்ளார்.
முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தம்பிதுரை வேட்புமனுத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...