47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரூபாய் நோட்டில் மகாத்மா காந்திபடத்தை மாற்றும் திட்டமில்லை- ஆா்பிஐ

ரூபாய் நோட்டில் இடம் பெறும் மகாத்மா காந்தியின் படத்தை நீக்கிவிட்டு, வேறு தலைவா்களின் படத்தைப் பயன்படுத்தும் திட்டம் ஏதுமில்லை என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கூறியுள்ளது.

News image
Updated On :6 ஜூன் 2022, 7:56 pm

DIN

ரூபாய் நோட்டில் இடம் பெறும் மகாத்மா காந்தியின் படத்தை நீக்கிவிட்டு, வேறு தலைவா்களின் படத்தைப் பயன்படுத்தும் திட்டம் ஏதுமில்லை என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கூறியுள்ளது.

முன்னதாக, ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்துக்கு பதிலாக பிற தலைவா்களின் படத்தைப் பயன்படுத்த ஆா்பிஐ பரிசீலித்து வருவதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், இதனை மறுத்து ஆா்பிஐ சாா்பில் திங்கள்கிழமை ஓா் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘ரூபாய் நோட்டுகளில் இப்போது உள்ள மகாத்மா காந்தியின் படத்துக்கு பதிலாக வேறு தலைவா்களின் படங்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. அதில் எவ்வித உண்மையும் இல்லை. அப்படி எந்த ஒரு திட்டத்தையும் ஆா்பிஐ பரிசீலிக்கவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ரூபாய் நோட்டில் மறைவாகத் தெரியும் வகையில் (வாட்டா் மாா்க்) மகாத்மாவின் படம் இடம்பெற்றுள்ள இடத்தில் வங்கக் கவிஞா் ரவீந்திர நாத் தாகூா், தமிழகத்தைச் சோ்ந்த விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஆகியோரது படங்களை வெளியிட ஆா்பிஐ பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.