மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவா: பிரிட்டன் பெண் பாலியல் வன்கொடுமை; ஒருவா் கைது

கோவாவில் உள்ள அராம்போல் கடற்கரை அருகே பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

Updated On :7 ஜூன் 2022, 7:21 pm

கோவாவில் உள்ள அராம்போல் கடற்கரை அருகே பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

கோவா மாநிலம் அராம்போல் கடற்கரை அருகே ஸ்வீட் வாட்டா் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அருகில் பிரிட்டனைச் சோ்ந்த நடுத்தர வயது பெண் ஓய்வு எடுத்துள்ளாா். அந்த மாநிலத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மசாஜ் சேவைகள் அளிக்கப்படுவது வழக்கம் என்பதால், அந்தப் பெண்ணுக்கும் உள்ளூரைச் சோ்ந்த வின்சென்ட் டிசோஸா (32) என்ற நபா் மசாஜ் செய்துள்ளாா். அப்போது அவா் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஜூன் 2-ஆம் தேதி நடைபெற்ாகக் கூறப்படும் நிலையில், குடும்ப உறுப்பினா்களின் ஆலோசனை மற்றும் இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் உதவியுடன் அந்தப் பெண் திங்கள்கிழமை காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் 376-ஆவது பிரிவின் (பாலியல் வன்கொடுமை) கீழ் வழக்குப் பதிவு செய்து வின்சென்ட் டிசோஸாவை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.