அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மகாராஷ்டிரத்தில் அதிகரிக்கும் கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று (ஜூன் 8) ஒரே நாளில் 2700 பேருக்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

News image
கோப்புப் படம்
Updated On :11 ஜூன் 2022, 8:28 am

DIN

மகாராஷ்டிரத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று (ஜூன் 8) ஒரே நாளில் 2,700 பேருக்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு மகாராஷ்டிரத்தில் ஒரு நாளில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,701 பேர்  கரோனாவினால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநிலத்தில்  கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 9,806 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 78,98,815 ஆக உள்ளது. கரோனாவினால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,47,866 ஆக உள்ளது.

மகாராஷ்டிரத்தில் நேற்று (ஜூன் 7) ஒரே நாளில் 1,881 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று (ஜூன் 8) 2,701 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருவது மாநில சுகாதாரத் துறையினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.