நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

4 மாநிலங்களை உன்னிப்பாக கவனிக்கும் மத்திய அரசு: ஏன் தெரியுமா?

நாடு முழுவதும் கரோனா அடுத்த அலை எழுமோ என்ற அச்சம் மெல்ல எழும் அளவுக்கு நாள்தோறும் கரோனா பாதிப்பு சப்தமில்லாமல் அதிகரித்து வருகிறது.

News image
4 மாநிலங்களை உன்னிப்பாக கவனிக்கும் மத்திய அரசு: ஏன் தெரியுமா?
Updated On :9 ஜூன் 2022, 12:37 pm

DIN

நாடு முழுவதும் கரோனா அடுத்த அலை எழுமோ என்ற அச்சம் மெல்ல எழும் அளவுக்கு நாள்தோறும் கரோனா பாதிப்பு சப்தமில்லாமல் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கரோனா அதிகரிக்கவில்லை என்பதும், ஒரு சில மாநிலங்களில்தான் அதிக பாதிப்பு இருக்கிறது என்பதும் புள்ளிவிவரம் சொல்லும் நல்ல செய்தி.

அவ்வாறு, கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், தில்லி உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு ஏற்கனவே பல்வேறு அறிவுறுத்தல்களை அனுப்பியிருக்கும் மத்திய சுகாதாரத் துறை, தற்போது அங்கு மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

கரோனா பரிசோதனை அதிகரித்தல், கரோனா உறுதி செய்யப்படுபவர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து தொடர் நிகழ்வுகளில் மாநில சுகாதாரத் துறைகள் கவனம் செலுத்துகிறதா என்றும் கண்காணிக்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.