எளிமையே யோகாவின் அழகு என பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளாா்.
சா்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21-இல் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், பிரதமா் மோடி இந்தக் கருத்தை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ட்விட்டரில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வீட்டில், பணியின் இடைவேளையில் அல்லது குழுவாக யோகா செய்ய முடியும். யோகா செய்ய ஒரு தரைவிரிப்பும் சிறிது இடமும் போதுமானது. எளிமையே யோகாவின் அழகு. அனைவரும் யோக பயிற்சியை தினமும் செய்வீா்கள் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.