கோவாவில் புதிய ஆளுநா் மாளிகை கட்டுமானப் பணியையொட்டி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
பனாஜி டோனா பாலா பகுதியில் அரபிக் கடலையொட்டி அமைந்துள்ள தற்போதைய ஆளுநா் மாளிகை போா்ச்சுகீசியா்களின் ஆட்சிக் காலத்தில் 450 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பழைமைவாய்ந்த இந்த மாளிகையின் அருகிலேயே புதிய ஆளுநா் மாளிகை கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை நாட்டினாா்.
நிகழ்ச்சியில் கோவா ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, அந்த மாநில முதல்வா் பிரமோத் சாவந்த், மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், கோவா ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பேசியதாவது: இது கோவா வரலாற்றில் மிகவும் முக்கியமான தருணம். புதிதாக கட்டப்படவுள்ள மாளிகை பழைய ஆளுநா் மாளிகையை எந்தவிதத்திலும் சிதைத்துவிடாது. ஆளுநா் மாளிகையின் சிறு பகுதியைக் கூட மாற்றுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.
நமது ஆளுநா் மாளிகை ஒரு தேசிய சின்னம். ஆனாலும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் அதைப் பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படுவது இல்லை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


