நாட்டில் இதுவரை 195.67 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை
நாட்டில் இதுவரை 195.67 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


நாட்டில் இதுவரை 195.67 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி,
நாட்டில் இதுவரை மொத்தம் 1,95,67,37,014 (195.67 கோடி) தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.
12-14 வயதிற்குள்பட்ட இளம் பருவத்தினருக்கு கரோனா தடுப்பூசி மார்ச் 16 இல் தொடங்கப்பட்டது. இதுவரை, சுமார் 3,54,38,168-க்கும் அதிகமான முதல்கட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. மேலும் 2,02,44,208 பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தியுள்ளன.
18-44 வயதினருக்கு கடந்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. முதல் டோஸ் 55,77,64,006 ஆகவும், இரண்டாவது டோஸ் 49,63,96,335 பேருக்கும், முன்னெச்சரிக்கையாக 17,23,321 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
மேலும், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,213 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,624 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை (பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து) 4,26,74,712 ஆக உள்ளது.
நாட்டில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 58,215 ஆகக் குறைந்துள்ளது, இது நாட்டின் மொத்த தொற்று பாதிப்பில் 0.09 சதவிகிதம் ஆகும். குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.65 சதவிகிதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5,19,419கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் (85,63,90,449) 85.63 கோடி கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...