மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காஷ்மீரில் தொடரும் என்கவுன்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2022, 11:47 am

காஷ்மீரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின்  குல்கம் மாவட்டத்தில் உள்ள மிஷிபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலியான பயங்கரவாதியின் அடையாளம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த செவ்வாய்கிழமை முதல் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், புல்வாமா மாவட்டத்திலுள்ள அர்முல்லா கிராமத்தில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகளை கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 15 கிலோ ஐஈடி வகை வெடிகுண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.