பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ம.பி: கார் கிணற்றில் விழுந்து 7 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் கார் கிணற்றில் விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.

News image

கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2022, 10:55 am

போபால்: மத்தியப் பிரதேசத்தில் கார் கிணற்றில் விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் வறண்ட கிணற்றில் கார் கவிழ்ந்து விழுந்ததில், ஒரு குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரில் இருந்தவர்கள் புதன்கிழமை மாலை திருமண விழாவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். எதிரே வந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரைக் காப்பாற்ற முற்பட்ட வேளையில், காரனது கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த வறண்ட கிணற்றில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர்  மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர முயற்சிக்கு பிறகு கிணற்றில் இருந்து 7 உடல்கள் மீட்கப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.