டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

கர்நாடகத்தில் 21 அதிகாரிகளின் அலுவலகங்களில் சோதனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சந்தேகிக்கப்படும் 21 அதிகாரிகளுக்கு சொந்தமான 80 இடங்களில் கர்நாடக ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தியதாக தெரிவித்தனர். 

News image
Updated On :17 ஜூன் 2022, 2:38 pm IST

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சந்தேகிக்கப்படும் 21 அதிகாரிகளுக்கு சொந்தமான 80 இடங்களில் கர்நாடக ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தியதாக தெரிவித்தனர். 

வெள்ளிக்கிழமை அதிகாலையில் தொடங்கி இந்த சோதனையில் 300 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றதாக தெரிவித்துள்ளது. 

இந்த சோதனையில் முதலீட்டு ஆவணங்களைத் தவிர, மதிப்புமிக்க பொருள்கள் மற்றும் பணம் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தன.

சோதனை செய்யப்பட்டவர்களில் நீர்ப்பாசனத்துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆகிய துறைகளைச் சேர்ந்த பொறியாளர்களும் அடங்குவர். 

மேலும், காவல்துறை அலுவலர், மாவட்ட பதிவாளர், சாலை போக்குவரத்து அதிகாரி, நிர்மிதி கேந்திரா திட்ட இயக்குனர், கடக் மாவட்டத்தில் பஞ்சாயத்து கிரேடு-2 செயலாளர் மற்றும் கால்நடை துறையின் உதவி கட்டுப்பாட்டாளர் ஆகியோரும் அடங்குவர். 

தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால், எந்தவித தகவலும் வெளியிடவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.