இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அக்னிபத் எதிர்ப்பு: மேற்குவங்கத்தில் ரயில் மறியல்

அக்னிபத் திட்டத்தினை எதிர்த்து மேற்கு வங்காளத்தின் வடக்கு பர்கானா மாவட்டங்களில் இன்று (ஜூன் 17) காலை மாணவர்கள் பலர் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
கோப்புப் படம்
Updated On :18 ஜூன் 2022, 6:39 am

DIN

அக்னிபத் திட்டத்தினை எதிர்த்து மேற்கு வங்காளத்தின் வடக்கு பர்கானா மாவட்டங்களில் இன்று (ஜூன் 17) காலை மாணவர்கள் பலர் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கிட்டத்தட்ட 50-லிருந்து 60 மாணவர்கள் சியால்டா-பான்கயோன் வழித்தடத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கிழக்கு மண்டல ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, “ தாக்கூர் நகர் ரயில்நிலையத்தில் மாணவர்கள் காலை 7.50 முதல் 9.15 வரை தண்டவாளங்களில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ரயில்வே சேவைகள் பாதிக்கப்பட்டன. பின்னர் ரயில் சேவைகள் வழக்கம் போல் தொடங்கின.” என்றனர்.

போராட்டக்காரர்கள் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக ரயில் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்வே சேவை பாதித்தது என கியாகட்டா காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனு தாக்கூரின் இல்லத்தை நோக்கி செல்லவும் முயற்சி செய்தனர்.

மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) அன்று ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் என்ற புதிய திட்டத்தினை அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒப்பந்த அடிப்படையில் குறுகிய 4 ஆண்டு காலத்திற்கு மட்டும் இளைஞர்களை ராணுவத்தில் பணியில் அமர்த்தும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல மாநிலங்களிலும் போராட்டம் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.