மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மத்தியப் பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு: 3 நக்சல்கள் சுட்டுக் கொலை

மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கட்லா கிராமத்தில் காவல்துறையினருக்கும் நக்கல்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட மூன்று நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

News image
Updated On :20 ஜூன் 2022, 11:38 am

மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கட்லா கிராமத்தில் காவல்துறையினருக்கும் நக்கல்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட மூன்று நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இந்த துப்பாக்கிச்சூடு குறித்த தகவலை மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது சுட்டுரை பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

கொல்லப்பட்ட நக்சல்கள் அவர்களின் பிரிவுக் குழு உறுப்பினர் நாகேஷ் என அடையாளம் காணப்பட்டனர். 

நக்சல்களிடம் இருந்து 303 ரைபிள் மற்றும் 12 துப்பாக்கிகளையும் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

மேலும், நக்சலைட்களாக இருந்தாலும் சரி, வேறு எந்த குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.