கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், 2019 - 20ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ராணுவ ஆள்சேர்ப்புக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 18,798 பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதாவது ஒட்டுமொத்தமாக தேர்வான 78,692 பேரில் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் 24 சதவீதம் பேர். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், இதே 219 - 20ஆம் ஆண்டில் ஒரே ஒரு மாநிலத்திலிருந்து 8,425 பேர் படைகளுக்கு தேர்வாகியுள்ளனர். அந்த மாநிலம் எது என்று பார்த்தால், அக்னிபத் திட்டத்தை எதிர்த்து அதிகம் பற்றி எரியும் உத்தரப்பிரதேசம்தான். பிகாரிலிருந்து 4,559 பேர் தேர்வாகியுள்ளனர்.