நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கர்நாடகத்தில் லேசான நிலநடுக்கம்

கார்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. 

News image
Updated On :23 ஜூன் 2022, 9:25 am

DIN

கார்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. 

பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்ட தகவலில், 

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை அருகே உள்ள பல கிராமங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய ஆணையர் மனோஜ் ராஜன் கூறுகையில், 

ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹோலேநரசிபுரா தாலுகாவில் உள்ள நகரனஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உள்பட்ட மலுகனஹள்ளி கிராமத்தின் மையப்பகுதியாக இருந்தது.

நிலநடுக்கத்தின் தீவிரம் மிதமானது என்றும், நிலநடுக்க மையத்திலிருந்து அதிகபட்சமாக 40-50 கிமீ தூரம் வரை நடுக்கம் உணரப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும், பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.