தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பெங்களூருவில் தனியார் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் கல்வி நிறுவனங்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

News image
வருமான வரித்துறை சோதனை
Updated On :23 ஜூன் 2022, 6:36 am

DIN

பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் கல்வி நிறுவனங்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

பெங்களூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணதேவராயா கல்வி நிறுவனம், ரேவா பல்கலைக்கழகம் மற்றும் திவ்யஸ்ரீ கல்வி நிறுவனம் மற்றும் பல நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனை நடந்தது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என இரண்டு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

கர்நாடகா மற்றும் கோவா மண்டலத்தைச் சேர்ந்த ஐ-டி அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. வருமான வரித்துறையைச் சேர்ந்த 250 அதிகாரிகள் கொண்ட குழு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவர்களிடம் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாகவும், இருக்கைகளை முடக்குவதாகவும், வரி ஏய்ப்பு செய்வதாகவும் புகார் எழுந்ததை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.