மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜார்க்கண்ட் இடைத்தேர்தல்: 11 மணி நிலவரப்படி 29.13 % வாக்குகள் பதிவு

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள மந்தர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 11 மணி நிலவரப்படி 29.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

News image
Updated On :23 ஜூன் 2022, 6:59 am

DIN

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள மந்தர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 11 மணி நிலவரப்படி 29.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

5 மாநிலங்கள் மற்றும் தில்லியில் உள்ள 3 மக்களவை மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

அதன்படி, மந்தர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 3.54 லட்சம் வாக்காளர்களில் 13 சதவீதம் பேர் தங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்தியதாகத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். 

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாகவும், இதுவரை எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி கே.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். முக்கிய சாவடிகளில் வெப்காஸ்டிங் வசதிகள் தவிர, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.433 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இடைத்தேர்தலில் 1.75 லட்சம் பெண்கள் உள்பட 3.54 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி களத்தில் உள்ள 14 வேட்பாளர்களின் தேர்தல் விதியை தீர்மானிக்க உள்ளனர்.

ஜூன் 26ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

வாக்குச் சாவடிகளில் ஜார்கண்ட் ஆயுதப்படை போலீசார், சிஆர்பிஎஃப், எஸ்எஸ்பி உள்பட 3,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.