புது தில்லி: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத முதல் வாரத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து 10ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க.. முதல் சுற்றில் இ.பி.எஸ். வெற்றி?
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி இன்னும் சில நாள்களில் சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாகவும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தேதியை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.