மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாட்னா சிறையில் 37 கைதிகளுக்கு கரோனா

பாட்னாவின் பியூர் சிறையில் உள்ள 37 கைதிகளுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

News image
Updated On :28 ஜூன் 2022, 10:43 am

பாட்னாவின் பியூர் சிறையில் உள்ள 37 கைதிகளுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதுகுறித்து சிறை அதிகாரி கூறுகையில், 

கைதிகளுக்கு கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் வளாகத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதார செயல்முறையைத் தொடங்கியது. 

சிறைக்கு வெளியேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கைதிகளை சந்திக்க சிறைக்கு வருபவர்களை சிறை நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. 

பீயூர் சிறையைத் தவிர, திங்களன்று பாட்னாவில் 80 பேருக்கு கரோனா தொற்று பதிவானது. கடந்த ஒரு வாரத்தில் பாட்னாவில் 531 வழக்குகள் காணப்பட்டன மற்றும் தொற்று விகிதம் 0.5 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

பாட்னாவைத் தவிர கயாவில் 11 பேருக்கும், பாகல்பூரில் 9 பேருக்கும், அர்வால், பாங்கா, சமஸ்திபூரில் தலா 4 பேருக்கும், ரோஹ்தாஸ் மற்றும் சஹர்சாவில் தலா மூவருக்கும், கதிஹார் மற்றும் முங்கரில் தலா 2 பேருக்கும், ஔரங்காபாத், போஜ்பூர், கிழக்கு சம்பாரண், கோபால் கஞ்ச், மாதேபுரா ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.