ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனைக்கு தடை விதிப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபடுதலை கட்டுப்படுத்தும் விதமாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒருமுறை பயன்படுத்தும் (one use) வகையிலான பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, வினியோகம் மற்றும் விற்பனையை வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடை செய்வதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.