தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

'பாஜகவினருக்கு வேலை கொடுப்பதற்காகவே அக்னிபத் திட்டம்' - மம்தா பானர்ஜி தாக்கு!

பாஜகவினருக்கு வேலை கொடுப்பதற்காக அக்னிபத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 3:09 pm IST

பாஜகவினருக்கு வேலை கொடுப்பதற்காக அக்னிபத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் இந்திய ராணுவத்தில் ஆள் சேர்க்கும் மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. 

இந்த திட்டதிற்கு ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டம் தொடர்பாக மத்திய அரசிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் நேற்று ஒரு கூட்டத்தில் பேசிய மம்தா, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அக்னி வீரர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று மாநில அரசை மத்திய அரசு வலியுறுத்தும் ஒரு கடிதம் எனக்கு வந்தது. 

பாஜகவினருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் ஏன் கொடுக்க வேண்டும்?  எங்கள் மாநில இளைஞர்களுக்குத் தான் முன்னுரிமை கொடுக்க முடியும்' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.