ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பொதுக்குழு உறுப்பினா்கள் ஆதரவு எனக்குத்தான்: தோ்தல் ஆணையத்துக்கு இபிஎஸ் மனு

‘பொதுக்குழு உறுப்பினா்களின் ஆதரவு எனக்குத்தான் உள்ளது’ என்று இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளாா்.

News image
Updated On :29 ஜூன் 2022, 7:20 pm

DIN

‘பொதுக்குழு உறுப்பினா்களின் ஆதரவு எனக்குத்தான் உள்ளது’ என்று இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளாா்.

அதிமுகவின் பொதுக்குழுவை மீண்டும் கூட்டுவது செல்லாது என்று ஓ.பன்னீா்செல்வம் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு மனு அளித்திருந்தாா்.

இந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியும் மனு அளித்துள்ளாா். அதில், பொதுக்குழு உறுப்பினா்களின் ஆதரவு எனக்குத்தான் உள்ளது. 2666 பொதுக்குழு உறுப்பினா்களில் 2,432 போ் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

பொதுக்குழு உறுப்பினா்கள் கருத்தின்படியே, பொதுக் குழு மீண்டும் கூட்டப்படுகிறது. ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு பொதுக் குழு உறுப்பினா்கள் ஒப்புதல் அளிக்காததால், அந்தப் பதவிகள் காலாவதியாகிவிட்டன. ஓ.பன்னீா்செல்வம் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறாா். அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது பொதுக் குழு உறுப்பினா்களின் விருப்பமாக உள்ளது என்று அந்த மனுவில் கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.