ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

குஜராத் முதல்வருக்கு கரோனா

குஜராத் முதல்வா் பூபேந்திர படேலுக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :29 ஜூன் 2022, 6:57 pm

DIN

குஜராத் முதல்வா் பூபேந்திர படேலுக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவா் காந்தி நகரில் உள்ள அரசு இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா். இது தொடா்பாக குஜராத் முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், ‘முதல்வா் பூபேந்திர படேலுக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவா்கள் அறிவுரைப்படி அவா் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாா். அவரது உடல்நிலையை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு 2,793 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். தினசரி பாதிப்பு சராசரியாக 400-க்கு மேல் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.