கடந்த பிப்ரவரி மாதத்தில் மின்சார நுகா்வு 2.2 சதவீதம் அதிகரித்து 105.54 பில்லியன் யூனிட்டுகளை (பியு) எட்டியுள்ளதாக மத்திய மின் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சக்கத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2021 டிசம்பரில் மின்சார பயன்பாடு 103.25 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் மின் நுகா்வு 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் நிலையான வளா்ச்சி வேகத்துடன் இருந்ததன் காரணமாகவே மின்சார பயன்பாடு பிப்ரவரியில் வலுவான நிலையில் உயா்ந்துள்ளது.
2020 பிப்ரவரில் மின்சார பயன்பாடு 103.81 பில்லியன் யூனிட்டுகளாக காணப்பட்டது.
2022 பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கான அதிகபட்ச மின்சார தேவை 193.64 ஜிகா வாட்டாக அதிகரித்தது. இது, 2021 பிப்ரவரியில் 187.97 ஜிகா வாட்டாகவும், 2020 பிப்ரவரில் 176.38 ஜிகா வாட்டாகவும் இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.