இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதால் உக்ரைனில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்க முடிகிறது என உத்தரப்பிரதேச பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பேசினார்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் சிறப்பு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 7 நாள்களாக உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதில், கர்நாடகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் நேற்று பரிதாபமாக பலியானார். மேலும், ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து மத்திய அரசு சார்பில் உக்ரைனிலுள்ள மாணவர்களை மீட்க சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | கெர்சன் நகரைக் கைப்பற்றியதாக ரஷிய ராணுவம் அறிவிப்பு!
இந்நிலையில், உத்தரப் பிரதேசம் ராபர்ட்ஸ்கஞ்சில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,
இந்தியாவின் வலிமை அதிகரித்துள்ளதால் உக்ரைனில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்க முடிகிறது. அனைத்து இந்தியர்களையும் மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆயிரக்கணக்கானோர் இதுவரை அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதற்கான ‘ஆப்ரேஷன் கங்கா’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, நான்கு மத்திய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

"எங்களை வைத்துதான் கூடுதல் சீட்! ஜெயக்குமார் TVK வரலாம்" செங்கோட்டையன் பேட்டி

5-வது நாளாகக் குறைந்த தங்கம் விலை!

பீலேவை விட மெஸ்ஸி சிறந்தவர்..! டிரம்ப் புகழாரம்!

ரஷிய எண்ணெய் வாங்க அனுமதி! அமெரிக்காவின் மிரட்டல் எவ்வளவு காலம் தொடரும்?
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

