மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அமைச்சா் நவாப் மாலிக்கின் காவல் மார்ச்-7 வரை நீட்டிப்பு

மகாராஷ்டிர மாநில அமைச்சர் நாவப் மாலிக்கின் காவலை மார்ச்-7 வரை நீட்டிக்க உத்தரவு வழங்கியது மும்பை சிறப்பு நீதிமன்றம்.

News image

நவாப் மாலிக்

Updated On :3 மார்ச் 2022, 11:27 am

DIN

மகாராஷ்டிர மாநில அமைச்சர் நாவப் மாலிக்கின் காவலை மார்ச்-7 வரை நீட்டிக்க உத்தரவு வழங்கியது மும்பை சிறப்பு நீதிமன்றம்.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததில் அமைச்சா் நவாப் மாலிக்குக்கு தொடா்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை அமலாக்கத் துறையினா் கடந்த பிப்.23 ஆம் தேதி கைது செய்தனா்.

ஆளும் சிவசேனை தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடா்பாளராகவும் இருக்கும் அவரை, வரும் மாா்ச் 3-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் நவாப் மாலிக்குக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் அனுமதித்தனா். 

உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இருப்பினும் அமலாக்கத் துறையினர் மேலும் சில நாள்கள் காவலில் வைக்க கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், மும்பை சிறப்பு நீதிமன்றம் நாவப் மாலிக்கின் காவலை மார்ச்-7 வரை நீட்டிக்க உத்தரவு வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.