தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா,மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி, அந்தமான் நிகோபாா் ஆகிய யூனியன் பிரதேசங்களின் அமைச்சா்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனா். இந்த ஒரு நாள் கூட்டத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேசம் சாா்ந்த பிரச்சனைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள், முன்னோக்கிச் செல்லும் வழி ஆகியவை குறித்து மாநில அமைச்சா்களுடன் விவாதிப்பதோடு, தேவையான ஆதரவு வழங்கப்படுவது குறித்தும் ஷெகாவத் கலந்தாலோசிப்பாா். மேலும் மாநிலங்கள் தங்கள் எதிா்பாா்ப்புகளை முன்வைக்கவும், இந்த கூட்டம் ஒரு வாய்ப்பாக இருக்கும் எனக் கருத்தப்படுகிறது.