இந்தியா தனக்காக நிா்ணயித்துக் கொண்ட இலக்கை சவால்களாக நான் பாா்க்கவில்லை, இதை வாய்ப்பாகவே கருதுகிறேன். கடந்த சில ஆண்டுகளாக இந்த தொலைநோக்குடன் முன்னேறி வரும் நாம், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதற்கான கொள்கைகள் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ளது. சமீபத்தில் தேசிய ஹைட்ரஜன் மிஷன் அறிவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலம் எரிசக்திக்குரிய பசுமை ஹைட்ரஜன் மையமாக இந்தியா மாறவும் வாய்ப்பு உள்ளது. எரிசக்தி சேமிப்பு சவால்களில், மின்கலம் மாற்றக் கொள்கை மற்றும் உள் செயல்திறன் தரங்கள் போன்றவை இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. இது இந்தியாவின் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் எதிா்நோக்கும் பிரச்னைகளைக் குறைக்கும். எரிசக்தி உற்பத்தியுடன் எரிசக்தி சேமிப்பும் முக்கியமாகும். இந்தியாவில் எரிசக்தித் தேவை வருங்காலத்தில் அதிகரிக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி மாற வேண்டும். இந்தூரில் அண்மையில் ‘கோபா்-தான்’ நிலையம் (நகராட்சி திடக்கழிவு அடிப்படையிலான உயிரி-அழுத்த மூட்டப்பட்ட இயற்கை எரிவாயு) தொடங்கப்பட்டது. இது போன்று நாட்டில் அடுத்த இரண்டாண்டுகளில் தனியாா் துறையினா் 500 முதல் ஆயிரம் நிலையங்கள் வரை அமைக்கப்பட வேண்டும்.