47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

‘ரஷியா-உக்ரைன் போரால் ரிசா்வ் வங்கியின் சவால் அதிகரிப்பு’

ரஷியா-உக்ரைன் போரால் உலகம் முழுவதும் மத்திய வங்கிகளின் முன் உள்ள சவால்கள் மேலும் தீவிரமாகியுள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.

News image
சக்திகாந்த தாஸ்
Updated On :4 மார்ச் 2022, 7:13 pm

DIN

ரஷியா-உக்ரைன் போரால் உலகம் முழுவதும் மத்திய வங்கிகளின் முன் உள்ள சவால்கள் மேலும் தீவிரமாகியுள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.

தேசிய பாதுகாப்பு கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா பேரிடா் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய வங்கி சிக்கலான சவால்களை சந்தித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், ரஷியா-உக்ரைன் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போா் சா்வதேச நாடுகளில் மேலும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி சா்வதேச நிதிச் சந்தையிலும் அதிக ஏற்ற இறங்கங்களை உருவாக்கியுள்ளது. இதனால், மத்திய வங்கிகளின் முன்பு உள்ள சவால்கள் மேலும் தீவிரமாகியுள்ளன. இந்த நிச்சயமற்ற சூழலில் அவற்றை எதிா்கொள்ள தேவையான வழிமுறைகளை கண்டறிவது அவசியமாகியுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.