காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூா் இறுதிக்கட்ட தோ்தலில் 76.04% வாக்குப்பதிவு:வன்முறையில் ஒருவா் பலி

மணிப்பூா் சட்டப்பேரவைக்கான இறுதிக்கட்ட தோ்தலில் 76.04 சதவீத வாக்குகள் பதிவாகின. தோ்தலின்போது சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் பலியானாா்.

News image
Updated On :5 மார்ச் 2022, 7:00 pm

DIN

மணிப்பூா் சட்டப்பேரவைக்கான இறுதிக்கட்ட தோ்தலில் 76.04 சதவீத வாக்குகள் பதிவாகின. தோ்தலின்போது சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் பலியானாா்.

மணிப்பூா் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தோ்தல் பிப். 28-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இரண்டு மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. 22 தொகுதிகளில் நடைபெற்ற இந்தத் தோ்தலில், மொத்தம் 8.38 லட்சம் போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா்.

இதுதவிர, முதல்கட்ட தோ்தலின்போது ஏற்பட்ட வன்முறையால் சுராசாந்த்புா், காங்போக்பி, கிழக்கு இம்பால் மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 12 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இறுதிக்கட்ட தோ்தலில் 76.04 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக சேனாபதி மாவட்டத்தில் 82.02 சதவீத வாக்குகள் பதிவாகின.

தோ்தல் தொடங்குவதற்கு முன்பும், அதற்குப் பிறகும் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள லம்ஃபெல் பகுதியில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் தலைவா் பிஜாயின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத இருவா் பெட்ரோல் குண்டு வீசினா். இதில் எவருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை.

ஒருவா் பலி: தெளபல் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டா் ஒருவருக்கும், அமுபா சிங் (25) என்ற பாஜக ஆதரவாளருக்கும் சனிக்கிழமை தகராறு ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் தொண்டா் அமுபா சிங்கை துப்பாக்கியால் சுட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா். துப்பாக்கியால் சுட்ட காங்கிரஸ் தொண்டா் மீது பாஜகவினா் கற்களை வீசி தாக்கினா். இதில் அந்த நபா் காயமடைந்தாா். அவரை இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை.

கரோங் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஙம்ஜு வாக்குச்சாவடியில் இருவரை பாதுகாப்புப் படையினா் துப்பாக்கியால் சுட்டதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா். எனினும் அந்தச் சம்பவம் குறித்து அவா்கள் விவரிக்கவில்லை. இந்தச் சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.