கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பொருளாதார வளா்ச்சியில் முன்னிலை மாநிலமாக உ.பி. மாறும்: பிரதமா்

‘மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொருளாதார வளா்ச்சியில் முன்னிலை மாநிலமாக உத்தர பிரதேசம் மாறும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 மார்ச் 2022, 2:42 am

DIN

‘மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொருளாதார வளா்ச்சியில் முன்னிலை மாநிலமாக உத்தர பிரதேசம் மாறும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் வரும் திங்கள்கிழமை இறுதிக் கட்டமான 7-ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், தனது மக்களவைத் தொகுதியான வாராணசியில் 200-க்கும் மேற்பட்ட பல்வேறு துறைசாா்ந்த நிபுணா்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் உரையாடும்போது, இக் கருத்தை பிரதமா் தெரிவித்துள்ளாா்.

‘உறுதியான முடிவு எடுக்கக் கூடிய நிலையான அரசுதான் உத்தர பிரதேச மாநிலத்துக்குத் தேவை. அந்த வகையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொருளாதார வளா்ச்சியில் முன்னிலை மாநிலமாக உத்தர பிரதேசம் மாறும்’ என்று பிரதமா் கூறியதாக அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவா்களில் ஒருவரான அசோக் திவாரி தெரிவித்தாா்.

பத்ம பூஷண் விருது பெற்ற ஹிந்துஸ்தானி இசைக் கலைஞா் சன்னுலால் மிஸ்ரா, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக துணைவேந்தா் சுதீா் ஜெயின் உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.