கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உ.பி. இறுதிக் கட்ட தேர்தல்: நாளை வாக்குப் பதிவு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் 7-வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நாளை (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

News image
Updated On :6 மார்ச் 2022, 4:43 pm

DIN


உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் 7-வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நாளை (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், முதல் 6 கட்டங்களுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இறுதிக் கட்டமாக 54 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாராணசி தொகுதிக்கும் நாளைதான் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

54 தொகுதிகளில் 11 தொகுதிகள் பட்டியலினத்தவர்களுக்கும், 2 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

613 வேட்பாளர்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப்போகும் இந்த வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 2.06 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவைத் தேர்தல் நாளைய வாக்குப் பதிவுடன் நிறைவடைகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.