விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவாவில் பெரும்பான்மையைப் பெறுவது உறுதி: ப.சிதம்பரம்

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

News image

ப.சிதம்பரம் (கோப்புப் படம்)

Updated On :9 மார்ச் 2022, 3:02 pm

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

கோவா உள்பட உத்தரப் பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மார்ச் 10) நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாநிலங்களில் இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் செய்யப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனையொட்டி கட்சித் தலைவர்கள் அந்தந்த மாநிலங்களில் முகாமிட்டுள்ளன. அந்தவகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கோவாவிற்குச் சென்றுள்ளார். 

அப்போது ஏஎன்ஐ செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், கோவாவில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவோம் என்று கூறிச்சென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.