ஒருவரை ஒருவர் நம்பவில்லை: மும்பை உயர் நீதிமன்றம் வேதனை

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கும், ஆளுநர் பி.எஸ். கோஷ்யாரிக்கும் இடையேயான மோதல் போக்கு குறித்து மும்பை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
ஒருவரை ஒருவர் நம்பவில்லை: மும்பை உயர் நீதிமன்றம் வேதனை
ஒருவரை ஒருவர் நம்பவில்லை: மும்பை உயர் நீதிமன்றம் வேதனை
Published on
Updated on
1 min read


மும்பை: மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கும், ஆளுநர் பி.எஸ். கோஷ்யாரிக்கும் இடையேயான மோதல் போக்கு குறித்து மும்பை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு விவகாரங்களில், முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அரசியலமைப்பின் இரண்டு முக்கிய தூண்கள் இவ்வாறு ஒருவரை ஒருவர் நம்பாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்யும் விவகாரம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் முறையீடுகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், இரு தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பேசுங்கள். உங்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை களையுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com