மொத்தம் 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாபில் 92 இடங்களைக் கைப்பற்றி, மாபெரும் வெற்றியை ஆம் ஆத்மி பதிவு செய்தது. இந்த வெற்றியைத் தொடா்ந்து கட்சியின் மாநிலத் தலைவரும், முதல்வா் வேட்பாளருமான பகவந்த் மான், தில்லியில் அரவிந்த் கேஜரிவாலை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, கட்சியின் பஞ்சாப் மாநில அரசியல் விவகார பொறுப்பாளா் ராகவ் சாதா ஆகியோரும் பங்கேற்றனா். இந்த ஆலோசனைக்குப் பிறகு, பகவந்த் மான் பஞ்சாப் திரும்பினாா்.