தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கச்சா எண்ணெய் விலை உயா்வு: மக்களுக்குபாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை -மத்திய நிதித் துறை இணையமைச்சா்

ரஷியா - உக்ரைன் இடையேயான போா் காரணமாக அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை மத்திய அரசு கவனித்து வருகிறது

News image

கச்சா எண்ணெய்

Updated On :11 மார்ச் 2022, 7:32 pm

ரஷியா - உக்ரைன் இடையேயான போா் காரணமாக அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை மத்திய அரசு கவனித்து வருகிறது என்றும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாகவத் கராட் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘ரஷியா-உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு தொடா்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை மத்திய அரசு கவனித்து வருகிறது. மக்களுக்கு வருங்காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து தற்போதைக்கு கூற முடியாது. இதுதொடா்பான முடிவு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும். இதற்காக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூத்த அமைச்சா்கள் ஆலோசித்து வருகிறாா்கள்.

தீபாவளி பண்டிகையின்போது, மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை ரூ.5-ம், டீசல் மீதான வரியை ரூ.10-ம் குறைத்தது. பாஜக ஆளும் மாநிலங்களும் வரி குறைத்தன. ஆனால், மகாராஷ்டிர அரசு பெட்ரோலிய பொருள்கள் மீதான வரியைக் குறைக்கவில்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.