தொடா்ந்து, மாநில ஆளுநா் மாளிகைக்கு வெள்ளிக்கிழமை வந்த முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி, தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் சமா்ப்பித்தாா். பின்னா், செய்தியாளா்களைச் சந்தித்த சன்னி, ‘மக்களின் தீா்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்திருக்கின்றனா். தொடா்ந்து மக்களுக்கு சேவை செய்வோம். கடந்த 111 நாள்கள் முதல்வராக மாநிலத்தில் ஆட்சி செய்தபோது, மின் கட்டணம் குறைப்பு, வாகன எரிபொருள், மணல், சரளைக்கல் விலைக் குறைப்பு உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத்தில் அமையவுள்ள புதிய ஆம் ஆத்மி அரசு, இந்தத் திட்டங்களைத் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறினாா்.