‘உத்தரகண்ட் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்’: ஹரிஷ் ராவத்

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
ஹரிஷ் ராவத்
ஹரிஷ் ராவத்
Published on
Updated on
1 min read

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்கள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது.

இந்நிலையில், ஹரிஷ் ராவத் இன்று வெளியிட்ட செய்தியில்,

உத்தரகண்டில் வெற்றி பெற்று விடுவோம் என்று அனைவரும் நினைத்தோம். பிரசாரக் குழுத் தலைவர் என்ற முறையில் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

காரியக் கமிட்டி மற்றும் ஒவ்வொரு உறுப்பினரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதற்கு முன்னதாக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com