5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்த நிலையில், குலாம் நபி ஆசாத் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் ஜி-23 தலைவர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கபில் சிபல், பூபிந்தர் சிங் ஹூடா, ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி, சசி தரூர், மணி சங்கர், பிஜே குரியன், பிரெனித் கௌர், சந்தீப் தீக்சித் மற்றும் ராஜ் பாபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க | உக்ரைன் மீதான ராணுவத் தாக்குதலை நிறுத்த வேண்டும்: சர்வதேச நீதிமன்றம்
கபில் சிபல் இல்லத்தில் கூட்டத்தை நடத்த முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், குலாம் நபி ஆசாத் இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது. ஒரு வார இடைவெளியில் நடைபெறும் இரண்டாவது ஜி23 தலைவர்கள் கூட்டம் இது.
ஜி23 தலைவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திலும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.