புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குலாம் நபி ஆசாத் இல்லத்தில் ஜி-23 தலைவர்கள் கூட்டம்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்த நிலையில், குலாம் நபி ஆசாத் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் ஜி-23 தலைவர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

News image

குலாம் நபி ஆசாத் இல்லத்துக்கு வந்த சசி தரூர்

Updated On :16 மார்ச் 2022, 4:41 pm

DIN


5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்த நிலையில், குலாம் நபி ஆசாத் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் ஜி-23 தலைவர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கபில் சிபல், பூபிந்தர் சிங் ஹூடா, ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி, சசி தரூர், மணி சங்கர், பிஜே குரியன், பிரெனித் கௌர், சந்தீப் தீக்சித் மற்றும் ராஜ் பாபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கபில் சிபல் இல்லத்தில் கூட்டத்தை நடத்த முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், குலாம் நபி ஆசாத் இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது. ஒரு வார இடைவெளியில் நடைபெறும் இரண்டாவது ஜி23 தலைவர்கள் கூட்டம் இது.

ஜி23 தலைவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திலும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.