புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உ.பி.யில் ஹோலி கொண்டாட்டத்தின்போது தண்ணீர் பலூன் வீசியதால் கவிழ்ந்த ஆட்டோ

உ.பி.யில் ஹோலி கொண்டாட்டத்தின்போது தண்ணீர் பலூன் வீசியதால் சாலையில் சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது. 

News image
Updated On :20 மார்ச் 2022, 10:31 am

DIN

உ.பி.யில் ஹோலி கொண்டாட்டத்தின்போது தண்ணீர் பலூன் வீசியதால் சாலையில் சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது. 

வசந்த காலத்தை வரவேற்கும் வகையில், வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை ஆண்டுதோறும் மார்ச் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வண்ணப் பொடிகளைத் தூவி ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை கூறி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், இந்தப் பண்டிகை அமைகிறது.

அதன்படி இந்தாண்டு ஹோலி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் உ.பி.யின் பாக்பத் பகுதியில் உள்ள சாலையில் ஹோலியன்று பயணிகளுடன் ஆட்டோ ஒன்று வேகமாக சென்றுகொண்டிருந்தது.

அப்போது ஹோலி கொண்டாட்டம் என்கிற பெயரில் சாலையோரத்தில் இருந்த இருவர் ஆட்டோவின் மீது தண்ணீர் பலூன் வீசினர். இந்த சம்பத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பலூன் வீசியவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தப்யோடிவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.