அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கரோனா தடுப்பூசி கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதைக் கட்டாயமாக்கவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :22 மார்ச் 2022, 5:05 pm

DIN


கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதைக் கட்டாயமாக்கவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

கரோனா தடுப்பூசி தொடர்புடைய வழக்கில் தமிழ்நாடு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த், அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் மத்திய அரசு சார்பாக சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் கூறியதாவது:

"ஒரு சிறிய விளக்கம். 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயப்படுத்தியதாக தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது. அது கட்டாயமல்ல. மத்திய அரசு எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், ஆனால் அது கட்டாயமல்ல என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு" என்றார்.

முன்னதாக, தடுப்பூசி செலுத்தாதவர்களாலேயே கரோனா உருமாற்றம் அடைவதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.