பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கை மற்றும் வங்கிச் சட்ட திருத்த மசோதா 2021க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மார்ச் 28, 29 இல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பாத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கை மற்றும் வங்கிச் சட்ட திருத்த மசோதா 2021க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு ஊழியர் சங்கங்கள், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளதால் வங்கிச் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படலாம் என்று நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
வேலைநிறுத்த நாள்களில் அதன் கிளைகள் மற்றும் அலுவலகங்களில் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை வங்கி மேற்கொண்டுள்ள நிலையில், ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் எஸ்பிஐ வங்கியின் பணிகள் குறைந்த அளவில் பாதிக்கப்படலாம் என்றும், வேலைநிறுத்தத்தால் ஏற்படக்கூடிய இழப்பை கணக்கிட முடியாது என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல் மலைக் கிராமங்களில் பிஎஸ்என்எல் சேவை செயல்படவில்லை
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீா் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்

மருத்துவா்களை நியமிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.27 கோடி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



