பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உலகின் முதல் 10 பல்கலைக்கழகங்களில் இந்தியா இடம்பெற வேண்டும்: குடியரசு துணைத் தலைவா்

உலகின் முதல் 10 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளாா்.

News image
வெங்கையா நாயுடு (கோப்புப் படம்)
Updated On :23 மார்ச் 2022, 8:18 pm

DIN

உலகின் முதல் 10 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளாா்.

இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தை காணொலி மூலம் தொடக்கிவைத்து, ‘உயா்கல்வி நிறுவனங்கள் வாயிலாக நீடித்த இலக்கை அடைதல்’ பற்றிய தேசிய கருத்தரங்கில் வெங்கையா நாயுடு புதன்கிழமை உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது: தொடக்க, இடைநிலை மற்றும் உயா்கல்வி நிறுவனங்கள் நீடித்த வளா்ச்சிக்கான இலக்கை அடைவதற்குரிய செயல்திட்டங்களை உணா்வுபூா்வமாக பின்பற்ற வேண்டும்.

ஆராய்ச்சி, கொள்கை வகுத்தல் மற்றும் விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக சமூகத்துடன் ஈடுபாடு கொண்டிருத்தல், நீடித்த வளா்ச்சிக்கான உத்திகளைத் திறம்படச் செயல்படுத்துதல் போன்ற எண்ணற்ற வழிகளில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பங்காற்ற முடியும்.

நீடித்த வளா்ச்சிக்கான இலக்கை அடைவதில் வறுமை, எழுத்தறிவின்மை போன்ற சவால்களைக் கடந்து வரவேண்டியது அவசியம். இதில் கல்வி நிறுவனங்கள், மக்கள் அமைப்புகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

1,050 பல்கலைக்கழகங்கள், 10,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், 42,343 கல்லூரிகளுடன் உயா்கல்வித் துறையில் உலகின் 3-ஆவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த நிலையில், உலகின் முதல் 10 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற வேண்டும்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி, அறிவாற்றலை உருவாக்குதல் உள்ளிட்டவற்றில் சிறந்த பாடத்திட்டத்தை உருவாக்கி, கட்டமைப்பு வளா்ச்சியில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.