இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காஷ்மீர்: குண்டுவீச்சில் பாதுகாப்புப் படையினர் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரைனாவாரி பகுதியில் அமைந்துள்ள நாகா சோதனைச் சாவடியில் நேற்று(மார்ச்-23) அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கையெறி குண்டுவீச்சு தாக்குதலில்  இரு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :24 மார்ச் 2022, 5:47 am

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரைனாவாரி பகுதியில் அமைந்துள்ள நாகா சோதனைச் சாவடியில் நேற்று(மார்ச்-23) அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கையெறி குண்டுவீச்சு தாக்குதலில்  இரு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.

மேலும், அப்பகுதி வழியாகச் சென்ற இரண்டு போக்குவரத்துக் காவலர்கள் உள்பட 3 பேருக்கு குண்டு வெடித்ததில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீநகர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையைத் தாண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.