தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குரைத்து கொண்டே இருந்த நாய்...கோபத்தில் உரிமையாளரை கொன்ற நபர்

கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்கை பதிவு செய்ய காவல்துறையினர், குற்றம்சாட்டப்பட்ட நபரை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :24 மார்ச் 2022, 6:47 am

DIN

தில்லி நஜாஃப்கரில் வளர்ப்பு நாய் ஒன்று குரைத்து கொண்டே இருந்ததால், கோபமடைந்த நபர் அதன் உரிமையாளரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நஜாஃப்கர் நங்லி பால் பண்ணை பகுதியில் 85 வயது மதிக்கத்தக்க அசோக் குமார் என்பவரை 17 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வளர்ப்பு நாய் குரைத்து கொண்டே இருந்ததால், உரிமையாளர் முன்பே குற்றம்சாட்டப்பட்ட நபர் நாயை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர், உரிமையாளருக்கும் அந்த நபருக்கும் வாக்குவாதம் முற்றியது.

இதனைத் தொடர்ந்து, இரும்பு கம்பியை கொண்டு அசோக் குமாரை அந்த நபர் கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து மனைவி மீனா காவல்துறையினரிடம் அளித்த புகாரில், "எனது கணவர் நாயை மீட்க முயன்றபோது ஆத்திரமடைந்த அந்த நபர் அவரை தாக்கினார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு மயக்கமடைந்த அசோக் குமார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்கை பதிவு செய்ய காவல்துறையினர், குற்றம்சாட்டப்பட்ட நபரை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.