முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

நூலிழையில் 2 முறை உயிர் தப்பிய சிறுவன்: விடியோவை பார்க்கவே தைரியம் வேண்டும்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன், நூலிழையில் ஒரு முறை அல்ல இரண்டு முறை உயிர் தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

நூலிழையில் 2 முறை உயிர் தப்பிய சிறுவன்: விடியோவை பார்க்கவே தைரியம் வேண்டும்

Updated On :26 மார்ச் 2022, 4:56 pm IST


கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன், நூலிழையில் ஒரு முறை அல்ல இரண்டு முறை உயிர் தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சைக்கிளை ஓட்டி வந்த எட்டு வயது சிறுவன், வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலையை எதிர்பாராதவகையில் கடக்கிறான். அப்போது, ஒரு சில நொடிகளில் பைக்கில் அடிபட்டு படுகாயமடைய வேண்டிய சிறுவன், நல்வாய்ப்பாக பைக் அவனுக்கு முன்பு கடந்துவிட, பைக் மீது சைக்கிள் லேசாக மோதுகிறது. இதில் சைக்கிளிலிருந்து கண் இமைக்கும் நொடியில் தூக்கி எறியப்படுகிறான். சாலையத் தாண்டிச் சென்று விழும் சிறுவன் உடனே எழுந்து நிற்பதற்குள், அவனது சைக்கிள், பைக் பின்னால் வந்து கொணடிருந்த பேருந்தின் சக்கரங்களுக்குள் சிக்கி சுக்குநூறாகிறது.

என்ன நடந்தது என்று தெரியாமல், பின்னால் வந்த வெள்ளை நிற கார் மெதுவாக சாலையில் நிற்க, அக்கம் பக்கத்தினர் சிறுவனை நோக்கி ஓடுகிறார்கள.

அப்போது, சிறுவனுக்கு நாம் உயிரோடுதான் இருக்கிறோமா என்பதே சந்தேகமாகக்கூட இருந்திருக்கலாம், ஆனால், அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்ததால் உயிர்பிழைத்தான் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த நொடியே, சைக்கிள் போனதே என்ற வருத்தமும் அதனைத் தொடர்ந்து பெற்றோருக்கு என்ன சொல்வது என்ற கேள்விகளும் அவன் மூளைக்குள் ஓடிக் கொண்டிருக்கலாம்.

இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வேகமாகரப் பரவி வருகிறது. சுட்டுரையில் மட்டும் பல ஆயிரம் பேர் இந்த விடியோவை பார்த்துள்ளனர். 

இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகாவிட்டால், இப்படி ஒன்று நடந்தது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள் என்று அந்த விடியோவை பகிர்ந்திருப்பவர்கள் தனது கருத்தாக பதிவிட்டுள்ளார்.

சாலையில் விளையாட்டாக சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த சிறுவன், எதிர்பாராதவிதமாக பெரும் விபத்தில் சிக்கவிருந்த காட்சியைப் பார்க்கும் பெற்றோர், பிள்ளைகளுக்கு சாலை விதிகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், சிறுவன் மீதே தவறு இருந்தாலும், அவன் அதிர்ஷ்டசாலி என்றும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.