மார்ச் 30ல் 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

வங்காள விரிகுடா நாடுகளின் கூட்டமைப்பான 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற கலந்துகொள்ளவிருக்கிறார். 
பிரதமர் நரேந்திர மோடி  (கோப்புப் படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)

வங்காள விரிகுடா நாடுகளின் கூட்டமைப்பான 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற கலந்துகொள்ளவிருக்கிறார். 

பிம்ஸ்டெக்(பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு) என்பது இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் அடங்கிய அமைப்பு. 

வருகிற மார்ச் 30 ஆம் தேதி பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 5 ஆவது மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருக்கிறார். காணொலி வழியாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மோடி உரையாற்றவுள்ளார். 

இதுதொடர்பாக பிம்ஸ்டெக் மூத்த அதிகாரிகளின் கூட்டம் மார்ச் 28 ஆம் தேதியும் பிம்ஸ்டெக் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் மார்ச் 29 ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது. 

வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மார்ச் 28 -30 தேதிகளில் இலங்கை செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com