புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மார்ச் 30ல் 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

வங்காள விரிகுடா நாடுகளின் கூட்டமைப்பான 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற கலந்துகொள்ளவிருக்கிறார். 

News image

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)

Updated On :26 மார்ச் 2022, 6:31 am

DIN

வங்காள விரிகுடா நாடுகளின் கூட்டமைப்பான 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற கலந்துகொள்ளவிருக்கிறார். 

பிம்ஸ்டெக்(பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு) என்பது இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் அடங்கிய அமைப்பு. 

வருகிற மார்ச் 30 ஆம் தேதி பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 5 ஆவது மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருக்கிறார். காணொலி வழியாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மோடி உரையாற்றவுள்ளார். 

இதுதொடர்பாக பிம்ஸ்டெக் மூத்த அதிகாரிகளின் கூட்டம் மார்ச் 28 ஆம் தேதியும் பிம்ஸ்டெக் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் மார்ச் 29 ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது. 

வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மார்ச் 28 -30 தேதிகளில் இலங்கை செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.