உத்தரகண்ட் சட்டப்பேரவையின் முதல் பெண் தலைவராக ரிது காந்துரி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
நடந்து முடிந்த உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களைப் பெற்று ஆட்சியமைத்துள்ளது. இதில் கோத்வார் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ரிது காந்துரி முன்னாள் அமைச்சர் எஸ்எஸ் நெகியை விட 3 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
இதையும் படிக்க | காபி குடிப்பது இதயத்திற்கு நல்லதா? ஆய்வில் புதிய தகவல்
உத்தரகண்ட் முன்னாள் முதல்வரான பிசி காந்தூரியின் மகளான ரிது காந்துரி தற்போது மாநில சட்டப்பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
இதன்மூலம் உத்தரகண்ட் சட்டப்பேரவையின் முதல் பெண் பேரவைத் தலைவர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் யம்கேஷ்வர் தொகுதியில் போட்டியிட்டு ரிது காந்துரி வெற்றி பெறுவதற்கு முன்பாக நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியுள்ளார்.
சட்டப்பேரவைத் தலைவராக பொறுப்பேற்ற ரிது காந்துரிக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி, எதிர்க்கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

வேடந்தாங்கல், கரிக்கிலி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

