மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பாட்னாவில் சாலை விபத்து: 4 பெண்கள் பலி

பிகாரின் சரண் மாவட்டத்தில் லாரி மோதி நான்கு பெண்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :26 மார்ச் 2022, 11:47 am

DIN

பிகாரின் சரண் மாவட்டத்தில் லாரி மோதி நான்கு பெண்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தனர். 

தும்டுமா கிராமத்தில் உள்ள மஷ்ராக்-மல்மாலியா மாநில நெடுஞ்சாலையில் வெள்ளி இரவு 11 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இதுகுறித்து மஷ்ராக் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், 

பெண்கள் வீட்டிற்கு வெளியே திருமண சடங்குகள் செய்துகொண்டிருந்தபோது. அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது. அவர்களில் 3 பேர் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார். 

காயமடைந்தவர்கள் மஷ்ராக்கில் உள்ள பொது சுகாதார மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரை காவல்துறையினர் கைது செய்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.